Wednesday, June 13, 2007

நிலா

நீலவா னாடைக்குள் உடல்மறைத்தே
     நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுதும் காட்டிவிட்டால் காதல்
    கொள்ளையினிலே இவ்வுலகு சாமோ? வானச்
சோலையிலே பூத்தத் தனிப்பூவோ நீதான்
    சொக்கவெள்ளிப்பாற் குடமோ அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில்மூழ்கி
   கனல்மாறி குளிரடைந்த ஒளிப்பிளம்போ?

No comments: