Monday, February 7, 2011

ஒன்றுபடு தமிழா... வென்றெடு தமிழியம்...

முட்கம்பிகளையும் முகாம்களையும் எங்களவனுக்கு சொந்தமாக்கி
முல்லைத்தீவும் மட்டக்களப்பும் சிங்களவனுக்கு சொந்தமாக்கி
முடிந்துவிட்ட தெம்மினம் என்று முகாரி பாடும் மூடர்களுக்கு
முடிவொன்று கட்டிடவே முழங்கிடுவோம் தமிழா ...

சொந்த நாடுகேட்டு நின்ற இனம் -இன்று
சோறு கேட்டு நின்ற பின்னும்
சொரனையற்று போனோமடா  தமிழா -அன்று
அதிகார பகிர்வு கேட்ட இனம்
ஆடை கேட்டு நிற்கிறதே -இனியும்
அடிமைப்பட்டு கிடப்பதோ நாம் தமிழா

இனமும் மொழியும் இருகண்கள்
என நம்மை வளர்த்தாரடா தமிழா
இதையும் இழந்து அதையும் இழந்து
இருகண் இல்லா இந்தியன் என்பதில்
என்ன பயன் கண்டாய்?
ஆண்டவனும் ஆள்பவனும் நம்மை
அடகு பொருளாய் மாற்றியதை தவிர...

உழைப்பை சுரண்டும் ஊழல் முதலைகளின்
இந்திய அரசியல் சாசனம் என்னும்
அடிமை விலங்கை அறுத்தெறிய
ஒன்றுபடு தமிழா வென்றெடு தமிழியம்.