ஆண்டவனே பிடிக்காதெனினும்
அவளுக்காக அர்ச்சனை செய்ய
அன்று ஆலயம் சென்றேன்...
அர்ச்சகர் கேட்டார்
"அவள் என்ன நட்ச்சதிரம்?" என்று,
பாவம், அவருக்கெப்படி தெரியும்
அவளொரு நிலவென்று!!!
Thursday, August 16, 2007
Tuesday, June 26, 2007
குயிலும் குரங்கும்
மற்றைநாட் கண்ட மரத்தே குயிலில்லை,
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்!
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல்
விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மாவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும்
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்ந்தேன்.
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே,
பேடைக் குயிலிதனைப் பேசியது:-"வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,
எண்ணிநின்றார்தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும்,விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு,
கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன்; ஆரியரே கேட்டருள்வீர்!"
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதையானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)
காதல், காதல், காதல்;
காதல் போயிற் காதல் போயிற் சாதல்,
சாதல், சாதல். முதலியன
(குயலின் பாட்டு)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே-
காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டாங்ஙனே
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
"ஆவி யுருகுதடி, ஹா ஹா!" என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,
"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!
பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்;
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்;
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்;
இப்பொழுதுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்"
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும்,
ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை.
சுற்றுமுற்றும் பார்த்துத் துடித்து வருகையிலே-
வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே!
நெஞ்சகமே! தொல்விதியின் நீதியே! பாழுலகே!
கண்ணாலே நான்கண்ட காட்சிதனை என்னுரைப்பேன்!
பெண்ணால் அறிவிழக்கும் பித்தரெல்லாம் கேண்மினோ!
காதலினைப் போற்றுங் கவிஞரெலாங் கேண்மினோ!
மாதரெலாங் கேண்மினோ! வல்விதியே கேளாய் நீ!
மாயக் குயிலோர் மரக்கிளையில் வீற்றிருந்தே
பாயும் விழிநீர் பதைக்குஞ் சிறியவுடல்
விம்மிப் பரிந்து சொலும் வெந்துயர்ச்சொல் கொண்டதுவாய்
அம்மாவோ! மற்றாங்கோர் ஆண்குரங்கு தன்னுடனே
ஏதேதோ கூறி இரங்கும் நிலைகண்டேன்.
தீதேது? நன்றேது? செய்கைத் தெளிவேது?
அந்தக் கணமே அதையுங் குரங்கினையும்
சிந்தக் கருதி உடைவாளிற் கைசேர்ந்தேன்.
கொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை
நின்று சற்றே கேட்பதற்கென் நெஞ்சம் விரும்பிடவும்,
ஆங்கவற்றின் கண்ணில் அகப்படா வாறருகே
ஓங்கு மரத்தின்பால் ஒளிந்துநின்று கேட்கையிலே,
பேடைக் குயிலிதனைப் பேசியது:-"வானரரே!
ஈடறியா மேன்மையழ கேய்ந்தவரே! பெண்மைதான்
எப்பிறப்புக் கொண்டாலும், ஏந்தலே! நின்னழகைத்
தப்புமோ? மையல் தடுக்குந் தரமாமோ?
மண்ணிலுயிர்க் கெல்லாந் தலைவரென மானிடரே,
எண்ணிநின்றார்தம்மை; எனிலொருகால் ஊர்வகுத்தல்,
கோயில், அரசு, குடிவகுப்புப் போன்ற சில
வாயிலிலே, அந்த மனிதர் உயர்வெனலாம்.
மேனி யழகினிலும்,விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி யிருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே,
வானரர்தஞ் சாதிக்கு மாந்தர் நிக ராவாரோ?
ஆன வரையும் அவர்முயன்று பார்த்தாலும்,
பட்டுமயிர் மூடப் படாத தமதுடலை
எட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்,
மீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்
ஆசை முகத்தினைப்போ லாக்க முயன்றிடினும்
ஆடிக் குதிக்கும் அழகிலுமை நேர்வதற்கே
கூடிக் குடித்துக் குதித்தாலும், கோபுரத்தில்
ஏறத் தெரியாமல் ஏணிவைத்துச் சென்றாலும்,
வேறெத்தைச் செய்தாலும், வேகமுறப் பாய்வதிலே
வானரர்போ லாவரோ? வாலுக்குப் போவதெங்கே?
ஈனமுறுங் கச்சை இதற்கு நிகராமோ?
பாகையிலே வாலிருக்கப் பார்த்ததுண்டு,
கந்தைபோல்; வேகமுறத் தாவுகையில் வீசி எழுவதற்கே
தெய்வங் கொடுத்த திருவாலைப் போலாமோ?
சைவசுத்த போசனமும் சாதுரியப் பார்வைகளும்-
வானரர்போற் சாதியொன்று மண்ணுலகின் மீதுளதோ?
வானரர் தம்முள்ளே மணிபோல் உமையடைந்தேன்,
பிச்சைப் பறவைப் பிறப்பிலே தோன்றிடினும்,
நிச்சயமா முன்புரிந்த நேமத் தவங்களினால்
தேவரீர் காதல்பெறுஞ் சீர்த்திகொண்டேன்; தம்மிடத்தே
ஆவலினாற் பாடுகின்றேன்; ஆரியரே கேட்டருள்வீர்!"
(வானரப் பேச்சினிலே மைக்குயிலி பேசியதையானறிந்து கொண்டுவிட்டேன், யாதோ ஒரு திறத்தால்)
காதல், காதல், காதல்;
காதல் போயிற் காதல் போயிற் சாதல்,
சாதல், சாதல். முதலியன
(குயலின் பாட்டு)
நீசக்குயிலும் நெருப்புச் சுவைக்குரலில்
ஆசை ததும்பி அமுதூறப் பாடியதே-
காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும்,
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும் என்றுரைப்பார்.
வற்றற் குரங்கு மதிமயங்கிக் கள்ளினிலே
முற்றும் வெறிபோல் முழுவெறிகொண்டாங்ஙனே
தாவிக் குதிப்பதுவுந் தாளங்கள் போடுவதும்
"ஆவி யுருகுதடி, ஹா ஹா!" என்பதுவும்,
கண்ணைச் சிமிட்டுவதும், காலாலுங் கையாலும்
மண்ணைப் பிறாண்டியெங்கும் வாரி யிறைப்பதுவும்,
"ஆசைக் குயிலே! அரும் பொருளே! தெய்வதமே!
பேச முடியாப் பெருங்காதல் கொண்டு விட்டேன்;
காதலில்லை யானாற் கணத்திலே சாதலென்றாய்;
காதலினாற் சாகுங் கதியினிலே என்னை வைத்தாய்;
எப்பொழுதும் நின்னை இனிப்பிரிவ தாற்றுகிலேன்;
இப்பொழுதுதே நின்னை முத்தமிட்டுக் களியுறுவேன்"
என்றுபல பேசுவதும் என்னுயிரைப் புண்செயவே,
கொன்றுவிட எண்ணிக் குரங்கின்மேல் வீசினேன்
கைவாளை யாங்கே! கனவோ? நனவுகொலோ?
தெய்வ வலியோ? சிறு குரங்கென் வாளுக்குத்
தப்பி முகஞ்சுளித்துத் தாவி யொளித்திடவும்,
ஒப்பிலா மாயத் தொருகுயிலுந் தான்மறைய,
சோலைப் பறவை தொகைதொகையாத் தாமொலிக்க,
மேலைச் செயலறியா வெள்ளறிவிற் பேதையேன்
தட்டுத் தடுமாறிச் சார்பனைத்துந் தேடியுமே,
குட்டிப் பிசாசக் குயிலையெங்கும் காணவில்லை.
Tuesday, June 19, 2007
என் ஆசைகள் ஆயிரம்!!!
கண்களை மூடினால்...
கனவாக நீ வேண்டும் !!
கண்களை திறந்தால்.....
நிஜமாக நீ வேண்டும் !!
என் ஈர தலை துவட்ட,
முந்தானையுடன் உன் கரங்கள் வேண்டும் !!
உன் அழகை கவிதை வடிக்கும் போது
நீ வெட்கப்பட வேண்டும் !!
நீ வெட்கப்படும் போது
என் மார்மீது தலை சாய்க்க வேண்டும் !!
அடிக்கடி நான் முத்தமிட
எனக்கு உன் கண்ணங்கள் வேண்டும் !!
என் இதழ் வற்றி போகும்போது
ஈரப்பதம் ஊட்ட உன் உதடுகள் வேண்டும் !!
என் விடியல்கள் அதிகாலை
உன் முத்தத்தில் விடிய வேண்டும் !!
என் இரவுகள் உன் தழுவளில்
துடங்க வேண்டும் !!
இன்னும் நான் எழுதாத
என் ஆசைகள் ஆயிரம்!!!
கனவாக நீ வேண்டும் !!
கண்களை திறந்தால்.....
நிஜமாக நீ வேண்டும் !!
என் ஈர தலை துவட்ட,
முந்தானையுடன் உன் கரங்கள் வேண்டும் !!
உன் அழகை கவிதை வடிக்கும் போது
நீ வெட்கப்பட வேண்டும் !!
நீ வெட்கப்படும் போது
என் மார்மீது தலை சாய்க்க வேண்டும் !!
அடிக்கடி நான் முத்தமிட
எனக்கு உன் கண்ணங்கள் வேண்டும் !!
என் இதழ் வற்றி போகும்போது
ஈரப்பதம் ஊட்ட உன் உதடுகள் வேண்டும் !!
என் விடியல்கள் அதிகாலை
உன் முத்தத்தில் விடிய வேண்டும் !!
என் இரவுகள் உன் தழுவளில்
துடங்க வேண்டும் !!
இன்னும் நான் எழுதாத
என் ஆசைகள் ஆயிரம்!!!
Wednesday, June 13, 2007
நிலா
நீலவா னாடைக்குள் உடல்மறைத்தே
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையினிலே இவ்வுலகு சாமோ? வானச்
சோலையிலே பூத்தத் தனிப்பூவோ நீதான்
சொக்கவெள்ளிப்பாற் குடமோ அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில்மூழ்கி
கனல்மாறி குளிரடைந்த ஒளிப்பிளம்போ?
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுகத்தை
கோலம் முழுதும் காட்டிவிட்டால் காதல்
கொள்ளையினிலே இவ்வுலகு சாமோ? வானச்
சோலையிலே பூத்தத் தனிப்பூவோ நீதான்
சொக்கவெள்ளிப்பாற் குடமோ அமுத ஊற்றோ
காலை வந்த செம்பரிதி கடலில்மூழ்கி
கனல்மாறி குளிரடைந்த ஒளிப்பிளம்போ?
Sunday, June 10, 2007
Friday, June 8, 2007
யாருக்கும் யாருக்கும் ...
அரங்கனாதனுக்கும் ஆனந்தவள்ளிக்கும் பிறந்ததால் இந்துவானாய்
அன்தோணிராஜிக்கும் ஆரோக்யமேரிக்கும் பிறந்ததால் கிரிஷ்துவானாய்
அப்துல்காதருக்கும் ஆயிஷாபேகத்துக்கும் பிறந்ததால் இசுலாமானாய்
யாருக்கும் யாருக்கும் பிறந்திருந்தால் நீ மனிதனாயிருப்பாய்??
அன்தோணிராஜிக்கும் ஆரோக்யமேரிக்கும் பிறந்ததால் கிரிஷ்துவானாய்
அப்துல்காதருக்கும் ஆயிஷாபேகத்துக்கும் பிறந்ததால் இசுலாமானாய்
யாருக்கும் யாருக்கும் பிறந்திருந்தால் நீ மனிதனாயிருப்பாய்??
Wednesday, May 23, 2007
தீர்தக்-கரையினிலே
தீர்தக்-கரையினிலே தெற்கு மூலையில்
சென்பகத்-தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தைத்தவரி விட்டாய்- அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்-போலவே
பார்வை தெரியுதடி
சென்பகத்-தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன் வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்
வார்த்தைத்தவரி விட்டாய்- அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த விடத்திலெல்லாம் உன்னைப்-போலவே
பார்வை தெரியுதடி
Tuesday, May 22, 2007
அக்கினி குஞ்சொன்று கண்டேண்
அக்கினி குஞ்சொன்று கண்டேண்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முன்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்.
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தனிந்தது காடு-தழல்வீரத்திற்
குஞ்சென்றும் மூப்பென்று முன்டோ
தத்தரிகட தத்தரிகட தித்தோம்.
Friday, April 13, 2007
பாரதிதாசன் கவிதை
கனியிடை யேறிய சுழையும்-முற்றள்
கழையிடை யேறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சிப்
பாகிடை யேறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள னீரும்
இனியென யென்பேன்-எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!!
கழையிடை யேறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சிப்
பாகிடை யேறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள னீரும்
இனியென யென்பேன்-எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர்!!
பாரதி கவிதை
தேடி சோறு நிதம் தின்று
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
தினம் சின்னஞ்சிரு கதைகள் பேசி
வாடி துன்பம் மிக உழன்று
பிறர் வாட பல செயல்கள் செய்து
நரை கூடி கிழப்பருவம் எய்தி
கொடும் கூற்றுக்கிரையாகி பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலவே
நானும் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Subscribe to:
Posts (Atom)